districts

பிரசாதம் கேட்ட தீட்சிதருக்கு அடி உதை

சிதம்பரம், மார்ச் 24 - சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்க ளின் ஒருவரான கிருஷ்ணசாமி  தீட்சிதர் (62) இவர்  புதன்கிழமை இரவு கோவிலில் உள்ள தீட்சிதர்கள் அலுவலகத்திற்கு  பிரசாதம் வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த  கோவில் செய லாளர் ராஜ கணேசன் என்பவருடைய தம்பி ரவி செல்வன்,  கிருஷ்ணசாமி தீட்சிதரிடம்  உனக்கு பிரசாதம் தர முடியாது என கூறிய தாக கூறப்படுகிறது.  இதனையடுத்து இருவருக்கும்  இடையே வாக்குவாதம் முற்றி ரவி செல்வம் உள்ளிட்ட சில தீட்சி தர்கள் கிருஷ்ணசாமி தீட்சிதரை அடித்து உதைத்துள்ளனர். இதனால் வலி தாங்க முடியாத கிருஷ்ணசாமி   சிதம்பரம் அரசு மருத்துவமனையில்  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வீடு திரும்பினார். கடந்த சில நாட்களாக நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கோவிலுக்கு உள்ளே இருக்கும் கனகசபையில் பொதுமக்களை வழிபட அனுமதிக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், அனுமதிக்கக்கூடாது என மற்றொரு தரப்பினரும் தீர்மானம் நிறை வேற்றிக்கொண்டு கணேஷ் தீட்சிதரை கோவிலுக்குள் தாக்கினர்.  இதுகுறித்து சிதம்பரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தும் தீட்சிதர் களை காவல்துறையினர் இதுவரை  கைது செய்யவில்லை. இந்நிலையில் பிரசாதம் கேட்ட தீட்சிதர் தாக்கப்பட்டார்.