districts

img

கெலவரப்பள்ளி அணை மதகுகள் புனரமைக்கும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி,ஜூன் 25-

    கெலவரப்பள்ளி அணையின் மதகுகள் ரூ.26 கோடியில் புனரமைக்கும் பணியை சட்ட மன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

   கர்நாடக மாநிலம் நந்தி மார்க்கத்தில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திரு வண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் வழியாக கடலில் சென்று கலக்கிறது.  

    இந்த ஆறு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு முதலில் வந்து, பின்னர் கிருஷ்ணகிரி அணை வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்கிறது. மாவட்டத்தின் முக்கிய ஆறு இந்த ஆற்று நீரை நம்பி பல ஆயிரக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

     இந்நிலையில் கெலவரப்பள்ளி அணை யின், அணையில் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி யில் உபரி நீர் வழிந்தோடி கதவுகள், மணல் போக்கி கலவி, கால்வாய் தகவுகள் ஆகியவற்றை மாற்றி அமைக்கும் பணிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  

   இதையடுத்து இந்த பணிகளை மேற்கொள்ள முதலில் அணையில் உள்ள தண்ணீரை 24 அடியாக குறைப்பதற்கான பணி மற்றும் புனரமைக்கும் பணி துவங்கி யது. அதன்படி, தற்போது அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், தற்போது தேக்கி வைக்கப்பட்ட 41 அடி தண்ணீரை ஆற்றில் திறந்து விட முடிவு செய்யப்பட்டது.  

   கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் புனரமைப்பு பணி களை மாவட்ட ஆட்சியர் சரயு, ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.