சிதம்பரம் அருகே எண்ணா நகரம் கிராமத்தில் சாதிய வன்மத்துடன் நடந்த தாக்குதலில் காயமடைந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் கவியரசன் மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன். மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் வாஞ்சி நாதன், ஒன்றியச் செயலாளர் செல்லையா உள்ளிட்டோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.