விழுப்புரம்,ஜன.11- விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் வட்ட மருத்துவமனை மற்றும் நீதிமன்றம் வளாகம் கட்டிட வலியுறுத்தப்பட்டது. அதற்காக, திருவண்ணா மலை- விழுப்புரம் சாலையில் வீரங்கிபுரம் எல்லையில் அரசுக்கு சொந்தமான கல்லாங்குத்து புறம்போக்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தில் கட்டடங்களை கட்ட வலியுறுத்தி மீண்டும் வட்டாட்சியர் கார்த்திகேயனிடம் கண்டாச்சிபுரம் வளர்ச்சி குழு நினைவூட்டும் கடிதம் கொடுத்தனர். கடந்த 1.9. 2021 அன்று அனைத்துக் கட்சிகள், சமூக ஆர்வலர்கள். பல்வேறு அமைப்புகள் இணைந்து கண்டாச்சிபுரம் வளர்ச்சிக் குழு உருவாக்கி ஒருங்கி ணைப்பாளர் எஸ்.கணபதி தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தினர். தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலை வரிடம் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களோடு வளர்ச்சி குழு சார்பில் நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.