districts

சென்னை முக்கிய செய்திகள்

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் ஆய்வு

காஞ்சிபுரம், மார்ச்.14 - காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக் கான தேர்தல் குழுக்கள் மற்றும் கண்காணிப்பு கள் குறித்து ஆய்வு நடைபெற்றது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் செங்கல்பட்டு, திருப்போரூர் , செய்யூர், மதுராந்தகம் , உத்திரமேரூர் , காஞ்சிபுரம் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கி உள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 சட்டமன்ற தொகுதிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளும் அடங்கியுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இந்த நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அலுவலராக செயல்பட உள்ளார். வாக்கு எண்ணிக்கை அன்று சட்ட மன்றத் தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து  மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் நேரில் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டு எவ்வாறு பணிகள் மேற்கொள்ள வேண்டும். என ஆலோசனை வழங்கினர். இந்த ஆய்வின்போது , காஞ்சிபுரம் மாவட்ட பயிற்சி ஆட்சியர் சங்கீதா , வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி, தேர்தல் பிரிவு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 17 லட்சத்து 32 ஆயிரத்தி 946 வாக்காளர்கள் உள்ளனர்.

அறிவியல், கணிதத்தில் திறமையை  வெளிப்படுத்த பெண்களுக்கு அழைப்பு

சென்னை, மார்ச் 13-  நாடு தொழில்நுட்ப ரீதியாக முன்னேறி னாலும் பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் தங்களின் திறமையை வெளிப்படுத்த போராடி வருகிறார்கள்.  இந்த நிலையில் இந்தியாவில் இந்த துறைகளில் திறமை படைத்த பெண்கள் அதிக அளவில் இருப்பினும், அவர்கள் இது சம்பந்தமான பணிகளில் அமர்த்தப் படுவது மிகக்குறைவு என ஆய்வு ஒன்று தெரி விக்கிறது. எனவே, இந்த பாடங்களை படிக்க விரும்பும் பெண்களுக்கு போதிய பயிற்சியளிப்பது அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த கருத்தை வலியுறுத்தும் வகையில், ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ, அதன் சமீபத்திய டிஜிட்டல் பிரச்சாரமான ‘இருக்கை – அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் பெண்களை கொண்டாடுவோம்’ என்னும் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் மூலம், இந்தத் துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் தனது உறுதிப்பாட்டை விவோ மீண்டும் வலியுறுத்தி உள்ளது.  இந்த பாடங்களில் கல்வி மற்றும் தொழிலைத் தொடர விரும்பும் பெண்கள், குறிப்பாக பின்தங்கிய சமூகப் பொரு ளாதாரப் பின்னணியில் இருந்து வரு பவர்கள் சந்திக்கும் சவால்களையும் இந்த விளம்பரம் வெளிப்படுத்துகிறது.  இதன் முக்கிய நோக்கம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித கல்வி மற்றும் பணியிடங்களில் பாலின இடைவெளியைக் குறைப்பதை நோக்க மாகக் கொண்டுள்ளது.

காவல் ரோந்து திட்டம் துவக்கம்

சென்னை, மார்ச் 14- சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் சென்னை விமான நிலையத்தில் “விமான நிலைய காவல் – ரோந்து” திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்தில் பயணிகள் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக “விமான நிலைய காவல்- ரோந்து” திட்டத்தை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் வியாழனன்று (மார்ச் 14) கொடியசைத்து துவக்கி வைத்து 10 காவல் ஆளிநர்களுக்கு பேட்ஜ்கள் வழங்கினார். பயிற்சி பெற்ற 10 காவலர்கள், இந்த திட்டத்திற்கென வழங்கப் பட்டுள்ள 2 பிரத்யேக ரோந்து வாகனம், 1 பேட்டரி வாகனம் மற்றும் நவீன சாதனங்களுடன் 24 மணி நேரமும் சுழற்சி முறை யில் ரோந்து பணியில் ஈடு படுவார்கள். புதிதாக வரும் பயணி களுக்கு டாக்சி வாகன உதவி, அவசர உதவி, போன்றவைகள் கிடைக்க வும் இது வழிசெய்கிறது. நிகழ்ச்சியில் விமான நிலைய இயக்குநர் சி.வி.தீபக், சென்னை பெரு நகர காவல் கூடுதல் ஆணை யர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை ஆணையர்கள் எம். ஆர்.சிபிசக்ரவர்த்தி, மகேஷ்குமார், மத்திய தொழிற் பாதுகாப்பு படை துணைத்தலைவர் கே.வி.கே.ஶ்ரீராம், புனித தோமையர்மலை துணை ஆணையாளர் எம்.சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒரத்தூர் கிராமத்தில்  100 நாள் வேலை கேட்டு  விவசாய தொழிலாளர்கள் போராட்டம்

விழுப்புரம், மார்ச் 14- விழுப்புரம் அருகே ஒரத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பு வியாழக்கிழமை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நூறு நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்குட்பட்டது ஒரத்தூர் கிராமத்தில் 100 நாள் வேலை தடை செய்யப்பட்டுள்ளதாக கூறி மீண்டும் அதனை வழங்க வலியுறுத்தி வியாழனன்று ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிளை செயலாளர் ஏ.பாபு தலைமை தாங்கினார், போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.அர்ஜுனன், மாவட்ட செயலாளர் கே .சுந்தரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் பி.கலியமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். ஒரத்தூர் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் செயல்படாமல் உள்ள சமுதாயக் கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், ஊராட்சி மன்ற அலுவலகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், ஊராட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100 நாள் வேலையை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில் வட்டத் தலைவர் எம்.சேகர், மாவட்ட குழு எஸ்.அமுதா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அபராதங்களை குறைக்க கோரிக்கை

கடலூர், மார்ச் 14- கடலூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழி லாளர் சிஐடியு சங்கத்தின்  மாவட்ட பேரவை கூட்டம் கடலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.திருமுருகன் தலைமை தாங்கினார். வர வேற்புயாற்றினார். மாநில துணைத்தலைவர் எம்.பி. மதிவாணன், மாநில பொதுச்செயலாளர் வி.குப்பு சாமி, சிஐடியு மாவட்ட செய லாளர் டி. பழனிவேல், மாநில துணைத்தலைவர் பி.கருப்பையன், மாவட்ட செயலாளர் எஸ். சண்முகம் ஆகியோர் பேசினர். இந்த கூட்டத்தில் ஜி.சுரேஷ், ஏ.முரளி ஜி. ராஜசேகரன், எம்.முகமது, ஏ.ரகுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சாலைப்போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதிக்கின்ற ஒன்றிய அரசின் சட்டத் தொகுப்பை உடனடியாக திரும்பபெற வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.