திருவண்ணாமலை, ஜன.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கம் வட்டார குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளருமான ஆர்.காமராஜ் (59), புதன்கிழமை (ஜன.10) அதிகாலை 4 மணிக்கு மாரடைப்பால் உயிரிழந்தார். செங்கம் அடுத்த காயம் பட்டு கிராமத்தில் வசித்து வந்த அவருக்கு, சிந்தாமணி என்ற மனைவியும், கயல்விழி, ஓவியா என்ற மகள்களும், தமிழ்வாணன் என்ற மகனும் உள்ளனர். காமராஜ் உடலுக்கு, விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கே. நேரு, செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள், எம்.வீரபத்திரன், ப.செல்வன், எம்.பிரகலநாதன், கே.வாசுகி, எஸ்.ராமதாஸ், எ.லட்சுமணன், மாவட்டக்குழு, வட்டார செயலாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, காயம்பட்டு கிராமம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.