கள்ளக்குறிச்சி, மே 24-
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் காவல் நிலைய எல்லைக்குட் பட்ட எராகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (38). இவரது மனைவி ஜீவா (32). இவர்கள் விவ சாயம் செய்து வருகின்றனர். செவ்வாய்க்கிழமை (மே 22) இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று ஜீவாவை கத்தியால் தாக்கி, அவர் அணிந்திருந்த 7 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.
அதேபோல் அதே தெருவில் வசிக்கும் பழனி யம்மாள் (65) வீட்டின் கதவை உடைத்து, 50 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து மணிகண்டன், பழனி யம்மாள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.