districts

img

வடசென்னையில் பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்க கலாநிதி வீராசாமி எம்பி வலியுறுத்தல்

சென்னை, ஆக. 13- பெரம்பூர் அல்லது ஆர்.கே.நகர் பகுதியில் தபால் அலுவலகத்துடன் இணைந்த பாஸ்போர்ட் அலுவலகத்தை அமைக்கும்படி வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்  வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும், ஒன்றிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதி ராதித்ய எம்.சிந்தியாவிற்கும் கடிதம் எழுதி யுள்ளார். அதில்  கடந்த சில வருடங்களாக மேற்படிப்பு, வேலைவாய்ப்பு மற்றும்  சுற்றுலா செல்வதற்கு என இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தாங்கள்  அறிவீர்கள். இதனால் புதிதாக வெளிநாடு செல்ல முயலும் மக்களின் எண்ணிக்கை கூடி  வருவதால், கடவுச்சீட்டு கேட்டு விண்ணப்பிப் பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தபால் அலுவலகத்துடன் இணைந்த கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகத்தை அமைக்கும் திட்டம் 2017ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, இதுவரை நாடெங் கும் 429 இடங்களில் இதுபோன்ற அலுவல கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் மிகப்பெரிய தொகுதி களில் ஒன்றான வடசென்னை மக்களவைத் தொகுதியில் ஒரு கடவுச்சீட்டு வழங்கும் அலுவல கம் கூட இல்லை. சென்னையில்  அமைந்தகரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரம் முதலான இடங்களில் மட்டும் தற்போது  கடவுச்சீட்டு வழங்கும் அலுவ லகங்கள் உள்ளன. இவை மத்திய சென்னை மற்றும் தென் சென்னை மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளாகும். எனது தொகுதியைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு சற்று தொலைவான இடங் களில் அமைந்துள்ள கடவுச்சீட்டு வழங்கும்  அலுவலகங்களுக்கு சென்று விண்ணப் பிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே வடசென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் அல்லது ஆர்.கே. நகர் பகுதியில் அமைந்துள்ள தபால்  அலுவலகங்களில் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகத்தை அமைத்துத் தரவேண்டும். ஒன்றிய வெளியுறவுத்துறை, தகவல் தொடர்பு துறையும் இணைந்து இத்தகைய தபால் அலுவலகம் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்களை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.