சென்னை, ஜூலை 12 - கடப்பேரி ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியின் நிலை உயர்த்த வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்தி உள்ளது. தாம்பரம் கடப்பேரியில் ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். போதிய இடவசதி, கட்ட மைப்பு வசதி இல்லாததால் பலர் தனியார் பள்ளியை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. பள்ளிக்கு அருகாமையில் தனியாரிட மிருந்து மீட்கப்பட்ட 96 சென்ட் நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தி இருந்தது. இந்த இடத்தில், அதிகாரிகள், நீதிபதிகளுக்கு வீடுகள் கட்ட திட்டமிட்டு இருந்தனர். இதற்கு சிபிஎம் , தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி எதிர்ப்பு தெரிவித்தது. அந்த இடத்தில் பள்ளிக்கான கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என்று மக்களிடையே கையெழுத்து இயக்கம் நடத்தியது. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்தை சந்தித்து மனு அளித்தது. அதனைத் தொடர்ந்து மக்கள் இயக்கங் களை நடத்தியது. இதனையடுத்து திருபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கினார். அதன்படி ஆயிரத்து 600 சதுர அடியில் 3 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது. இந்த பள்ளி கட்டிட திறப்பு விழா வெள்ளியன்று (ஜூலை 12) நடை பெற்றது. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில், சிபிஎம் தொகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, தொகுதி குழு உறுப்பினர் ஆர்.பி.கோவிந்தன், மூத்த தலைவர்கள் கு.ராஜன்மணி, ஆர்.கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது எஸ்.ஆர்.ராஜா, கட்சியின் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா மனு அளித்தார். அதில், ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் தற்போது 8ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. மாணவர்கள் மேற் கொண்டு படிக்க நீண்ட தூரம் செல்ல வேண்டி யுள்ளது. எனவே, நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என படிப்படியாக தரம் உயர்த்த வேண்டும். மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.