districts

சென்னை முக்கிய செய்திகள்

விமானத்தில் பறந்த ஆதரவற்ற குழந்தைகள் 

சென்னை,அக்,29- சென்னையில் உள்ள வணிக வளாகங்களில் ஒன்றான பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கை பயணத்தை மாற்றும் வகையில் அவர்களை குஷிப்படுத்தும்  விதமாக விமான பயணத்திற்கு ஏற்பாடு செய்தது .  கோவையில் உள்ள அரசு சாரா தொண்டு நிறுவன மான  சேவா நிலையத்தில் உள்ள இந்த குழந்தைகளை கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்தனர்.  மெட்ராஸ் ரவுண்ட் டேபிள் இந்தியா 100 உடன் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இவர்களின் முயற்சியின் மூலம் இந்தக் குழந்தைகள் முதல் முறையாக விமானத்தில், கோவையில் இருந்து சென்னைக்கு வந்து மீண்டும் கோவைக்குத் திரும்பினர். இது அவர்களுக்கு ஒரு ஆனந்தமான அனுபவத்தை வழங்கியது இது குறித்து பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் மைய இயக்குநர் சபரி நாயர் கூறுகையில், அந்த குழந்தைகளுக்கு சிறகு களை கொடுப்பது மட்டு மல்ல, அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம் என்றார்.

இந்தியா கூட்டணி வெற்றிக்கு  திக பாடுபடும் கி.வீரமணி

ராணிப்பேட்டை, அக். 29 - ஒன்றிய பாஜக அரசின் குலத் தொழிலை திணிக்கும் திட்டத்தை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் வெள்ளியன்று  (அக். 27) ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சு. லோகநாதன் தலைமையில் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி. வீரமணி பேசுகையில், பெரு முதலாளிகளுக்கு கடனை அள்ளி வாரி வழங்கிக் கொண்டிருக்கும் ஒன்றிய பிஜேபி அரசு, வேலை வாய்ப்புகள் பல மடங்கு குறைந்துள்ளது ‘ஒரே நாடு’, ‘ஒரே தேர்தல்’ பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு இதுவே கடைசி தேர்தலாக இருக்கும் என்றார். எதிர்வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி வலுவாக வெற்றிபெறும் அதற்கு திராவிட கழகம் ராணுவப்படை போல பணியாற்றும் எனவும் அவர் தெரிவித்தார். இதில் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் எல்.சி. மணி, காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அசேன், மதிமுக உதயகுமார், விசிக மேற்கு மாவட்ட செயலாளர் சீம. ரமேஷ் கருணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக இரா. தமிழ்வாணன் நன்றி கூறினார்.

வங்கி ஊழியரின் வீட்டில் கொள்ளை
கடலூர், அக். 29- பண்ருட்டியில் வங்கி ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி, 4 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருள்ஜோதி நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணி யாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் கோவை யில் உள்ள தனது மகன்கள் வீட்டிற்கு சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட திருடர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 50 சவரன் தங்கம், வெள்ளி பொருட்கள், ரொக்கமாக 4 லட்சம் ஆகிய வற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.பண்ருட்டி பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள்  பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.