districts

img

திருவெண்ணெய் நல்லூர் செயலாளராக கே.சிவக்குமார்

விழுப்புரம்,நவ.4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவெண்ணெய்நல்லூர் வட்ட  23-வது மாநாட்டிற்கு ஏ.ஏழுமலை,கே.ராணி ஆகியோர் தலைமை தாங்கினர். கட்சியின் மூத்த உறுப்பினர் கே.எம். ஜெயராமன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். வட்ட குழு உறுப்பினர் பி.பழனி வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சங்கரன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். வட்டச் செயலாளர் கே.சிவக்குமார் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மூர்த்தி,  மாவட்டக் குழு உறுப்பினர்.ஆர்.தாண்டவராயன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.வேல்மாறன் நிறைவுரையாற்றினார். வட்டச் செயலாளராக கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார். திருக்கோவிலூர் அணையை புதுப்பிக்க வேண்டும், தென்பெண்ணை ஆறு, மலட்டாறு,கோரையாறு ஆகிவைகளால் சூழப்பட்டு தனி தீவாக உள்ள இக்கிராம பகுதிகளை இணைக்க மூன்று ஆறுகளிலும் பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.