சென்னை, நவ. 14 - அதிபர் முறையை கொண்டு வரு வதற்காகவே, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவ.7 முதல் தென் சென்னை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வரு கிறது. ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கை, உழைக்கும் மக்களுக்கு எதிரான மாநில அரசின் நடவடிக்கை களை கண்டித்து இந்த இயக்கம் நடை பெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக விருகம் பாக்கம் பகுதி, 127, 128வது வட்டத்திற் குட்பட்ட கிளைகள் சார்பில் புதனன்று (நவ.14) காந்தி நகர் பிரதான சாலை யில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத் தில் கே.பாலபாரதி பேசியதன் சுருக்கம் வருமாறு: தேர்தல்களுக்கு செலவிடப்படும் மொத்த தொகையில் 16 முதல் 22 விழுக்காடுதான் தேர்தல் ஆணையம் செலவிடுகிறது. இதனை காரணமாக கூறி, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. தேர்தல் முறையை முற்றிலுமாக ஒழித்துவிட்டு, அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரவும், இந்துராஷ்டிராவை நிறுவிடவும் பாஜக அரசு திட்டமிடுகிறது. அதன் தொடக்கமே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம். எனவே இதனை திரும்பப் பெற வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்தாலும், ஒன்றிய அரசு பெட்ரோலிய பொருட்க ளின் விலையை குறைக்க மறுக் கிறது. அத்தியாவசிய உணவுப் பொரு ட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து கொண்டே செல்கிறது. அதானி, அம்பானி போன்ற கார்ப்ப ரேட்டுகள் இந்த வியாபாரத்திற்குள் வந்த பிறகு விலை கட்டுக்கடங்காமல் செல்கிறது. இதனை ஆட்சியாளர்கள் தடுக்க வேண்டும். அதேசமயம் மாநில அரசு, அத்தியா வசியப் பொருட்கள் அனைத்தையும் நியாய விலைக் கடைகள் வாயிலாக வழங்க வேண்டும். குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்து உள்ளவர் களில் தகுதியான அனைவருக்கும் வழங்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் கொய்யா, வாழை போன்றவற்றை அரசே கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்க வேண்டும். பட்டாவுக்கான போராட்டம் தொடரும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யம், அரசு நிலங்களில் வசிப்போருக்கு கிரயப் பத்திரமும், பட்டாவும் கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. ஒருசில இடங்களில் பட்டாவை வழங்கினால் மட்டும் போதாது. பட்டாவுக்கான போராட் டத்தை தொடர்ந்து நடத்துவோம். தொழி லாளர்களின் பிரச்சனையில் மாநில அரசு கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். கல்வி நிலையங்களில் மத, சாதிய அமைப்புகள் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க வேண்டும். மக்கள் நலக் கோரிக்கைகளுக்கான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து நடத்தும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்திற்கு விருகை கிளைச் செய லாளர் பி.திருஞானம் தலைமை தாங்கி னார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பகுதிச் செயலாளர் ஏ.நடராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, சி.செங்கல்வராயன், இ.ரவி, பகுதிக்குழு உறுப்பினர் ரா.சரத் குமார் உள்ளிட்டோர் பேசினர். சேமாத் தம்மன் நகர் கிளைச் செயலாளர் ஏ.சுப்பிரமணி நன்றி கூறினார். முன்ன தாக சின்மையா நகர் கிளைச் செய லாளர் ஆர்.முருகன் வரவேற்றார்.