districts

img

பிளாஸ்டிக் பைகளை பார்த்தாலே மக்களுக்கு கோபம் வர வேண்டும்! சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை, ஜூன் 5- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஞாயி றன்று (ஜூன் 5)  சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. இதில் கலந்துகொண்ட  சுற்றுசூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்ய நாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிர மணியன் ஆகியோர் பொது மக்களுக்கு மஞ்ச பைகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்க ளிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகை யில்,  பிளாஸ்டிக் பைகளை பார்த்தாலே மக்களுக்கு கோபம் வர வேண்டும். பசுமை பரப்பின் விகிதத்தை அதிகரிக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார். அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பைகளை பயன் படுத்துவதை பழகிக் கொள்ள வேண்டும் என்றும் அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் அபாயம் குறித்த விழிப்புணர்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடியிருப்பு களில் ஒரே இடத்தில் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கல்வி நிலையங்களில் கொரோனா தொற்று முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரி வித்தார்.

;