சென்னை, டிச.25- இந்தியாவின் புகழ்பெற்ற ஜம்போ சர்க்கஸ் சாகச நிகழ்ச்சி சென்னையை அடுத்த ஆவடியில் நடைபெறுகிறது. இந்த சர்க்கஸ் காட்சிகளை தினசரி மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி ஆகிய நேரங்களில் கண்டு ரசிக்கலாம். கடந்த 1977 ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜம்போ சர்க்கஸ் நிறுவனம் இந்தியா உள்ளிட்ட வெளி நாடுகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை ஆவடியில் உள்ள கோவர்த்தனகிரி பிரியோ பிளாசா மைதானத்தில் தற்போது ஜம்போ சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதில் தான் சானியா, எகிப்து மற்றும் மணிப்பூரி சாகச கலைஞர்கள் பங்கேற்று சாகம் நிகழ்த்துகின்றனர். சர்க்கஸ்சில் மகேஷ் தன்யா வழங்கும் இரு பக்க அக்ரே பேடிக்ஸ், தான்சானியா கலைஞர்கள் வழங்கும் யோகா பேடிக்ஸ், லாடர் பேலன்ஸ், ரோலர் பேலன்ஸ், யுனிசைக் கிளிஸ்ட் ஆகியவை வியக்க வைக்கிறது. மேலும் ஸ்டிக் பேலன்ஸ், கண் ஸ்ப்ரிங் நெட், செங்குத்தாக ஊஞ்சலாடும் அக்ரோபேட், ரஸ்யன் ரோப் பேலன்ஸ், குதிரை சவாரி, பிளேயிங் டிராபிஸ், குளோப் டெத் ஆகிய புதிய விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன. ரூ.150, ரூ.250, ரூ.350 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை 62383 47006 மற்றும் 95628 29263 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு அறியலாம்