districts

img

பணி நிறைவு பாராட்டு விழா

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சென்னை தெற்கு கிளை-2ன் முன்னாள் திட்டச் செயலாளர் டி.அன்பழகனின் பணி நிறைவு பாராட்டு விழா வியாழனன்று (டிச.29) கிண்டியில் நடைபெற்றது. நிகழ்விற்கு கிளைத் தலைவர் எம்.தண்டபாணி தலைமை தாங்கினார். நிகழ்வில் அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ், சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.அன்பழகன், முன்னாள் செயலாளர் எஸ்.அப்பனு, ஏ.பழனி(ஓய்வு பெற்றோர் நல அமைப்பு), மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம், டி.பண்டாரம் பிள்ளை(கிளை-1),  கவுதம்(கிளை-2), மற்றும் இ.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.