கள்ளக்குறிச்சி, ஜூன் 7-
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக் குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறையின் சார்பில் கள்ளக்குறிச்சி வட்டத்தில் 1432 ஆம் பசலிக்கான வரு வாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது.
கல்வராயன் மலை வட்டம், குறு வட்டத்தில் 28 மனுக்களும் சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் குறு வட்டத்தில் 198 மனுக்களும், சங்கராபுரம் வட்டம் வடபொன்பரப்பி குறு வட்டத்தில் 111 மனுக்களும், உளுந்தூர்பேட்டை வட்டம் எறையூர் குறு வட்டத்தில் 203 மனுக்க ளும். திருக்கோவிலூர் வட்டம், ஆவி கொளப்பாக்கம் குறுவட்டத்தில் 87 மனுக்க ளும் பெற்றப்பட்டன.