சென்னை, ஆக. 8-
சென்னையில் இரண் டாம் கட்ட மெட்ரோ ரயில் சேவைக்காக பல்வேறு இடங்களில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரு கின்றன. உயர்மட்ட மேம் பால பாதைக்காக தூண் கள் அமைப்பது, நிலத்திற் குள் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைப்பது உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரு கின்றன. தற்போது அதற் கான பணிகள் முக்கிய கட் டத்தை எட்டி இருக்கிறது.
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை பயன்பாட் டிற்கு வந்தது. போக்கு வரத்து நெரிசலுக்கு மாற்றாக கொண்டுவரப் பட்ட மெட்ரோ ரயில்களில் தினசரி 2 லட்சத்து 50 ஆயி ரம் பேர் பயணிக்கின்றனர். 54 கிலோ மீட்டர் தொலை வுக்கு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் பயன் பாட்டில் இருக்கும் நிலை யில், தற்போது அடுத்தகட்ட மாக மேலும் 3 வழித்தடங்க ளில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் சேவை
சுமார் 61 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் 116 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பப்படுகிறது. இந்த 3 வழித்தடங்களில் மொத்தம் 118 ரயில் நிலையங்கள் அமைக்கப் பட உள்ளன. அதாவது, 3ஆவது வழித்தடத்தில் (மாதவரம் பால் பண்ணை - சிறுசேரி சிப்காட்) 19 உயர்மட்ட ரயில் நிலை யங்கள் மற்றும் 28 சுரங்கப் பாதை ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.
4ஆவது வழித்தடத்தில் (கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி) 18 உயர்மட்ட ரயில் நிலையங்களும் 9 சுரங்கப்பாதை ரயில் நிலையங்களும் அமைய இருக்கின்றன. அதேபோல், வழித்தடம் 5இல் (மாதவரம் - சோழிங்கநல்லூர்) 39 உயர்மட்ட ரயில் நிலையங் கள் மற்றும் 6 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் அமைய இருக்கின்றன.
சுரங்கப்பாதை பணிகள்
3ஆவது வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லிஸ் வரை 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் டாடா ப்ரா ஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந் திரங்கள் பயன்படுத்தப்படு கின்றன. 3ஆவது வழித்தடத் தில் நீலகிரி என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேலைகளை தொடங்கியது. தற்போது 1.4 கிலோ மீட்டர் சுரங்கப் பாதை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. நீல கிரி இயந்திரம் தற்போது மாதவரம் நெடுஞ்சாலையை வந்தடைந்துள்ளது. அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.