நாடு முழுவதும் ரயில்வே துறைக்கு சொந்தமான 5 அச்சகங்களை மூட முடிவெடுத்துள்ளது. இதனை கண்டித்து மே 6ந் தேதி முதல் டிஆர்இயு தலைமையில் ராயபுரம் அச்சக ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைமை அலுவலக கூடுதல் கோட்டப் பொருளாளர் முரளிதரன் தலைமையில் நடைபெறும் 11வது நாள் போராட்டத்தை ஆதரித்து சிஐடியு மாநில துணைத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.