சென்னை, மே 20 -
மாற்று குடியிருப்பு குறித்து வெளிப்படைத் தன்மை இல்லாததால், கணக்கெடுக்க வந்த அதிகாரிகளை பொதுமக்கள் திருப்பி அனுப்பினர். சேப்பாக்கம் வாலாஜா சாலை, பக்கிங்காம் கால்வாய் ஒட்டிய லாக் நகரில் இருந்து 2.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மறு சீரமைப்பு, மேம்பாட்டிற்கானமுன்னோடி திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
இதனையொட்டி கால்வாய் கரை யோரம் வாழும் மக்களை மாறு குடியமர்வு செய்வதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
இந்த முன்னோடி திட்டத்தை வெளிப்படை தன்மையோடு செயல்படுத்த வேண்டும். அதற்கான அறிவிப்புகளை வெளிப்படை தன்மையோடு வெளியிடவேண்டும், கால்வாய் கரையோரம் வசிக்கும் மக்க ளுக்கு சரியான மாற்று வாழ்வாதா ரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் சனிக்கிழமை யன்று (மே 20) லாக் நகர் பகுதியில் அதி காரிகள் கணக்கெடுப்பிற்கு வந்த னர். மாற்றுக் குடியிருப்பு குறித்து சரி யானதகவல்கள் தெரிவிக்காமல் அதி காரிகள் மழுப்பி உள்ளனர். ஆகை யால் மக்கள் கணக்கெடுப்பிற்கு ஒத்து ழைக்க மறுத்து விட்டனர்.
இதனால் அதிகாரிகள்திரும்பி சென்றனர். இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வே.ஆறுமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணிபகுதி பகுதிச் செயலாளர் கவிதா கஜேந்திரன் உள்ளிட்டோர் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.