சென்னை, ஜூலை 24 -
பெருங்குடி திருவள்ளு வர் நகர் பகுதி மக்களுக்கு அரசு காலம் தாழ்த்தாமல் குடிமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் வலியுறுத்தினார்.
சென்னை மாநகராட்சி, 182 வது வட்டம் திருவள்ளு வர் நகர் (பர்மா காலனி) 40 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்க ளுக்கு குடி மனைப்பட்டா வழங்க கோரி நீண்ட கால மாக மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தி வருகி றது. இந்த நிலையில் ஞாயி றன்று (ஜூலை 24) குடியி ருப்பு பகுதியை ஜி.ராம கிருஷ்ணன் பார்வை யிட்டார்.
பிறகு திருவள்ளுவர் நகர் குடியிருப்பு பாதுகாப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற ஊர்க் கூட்டத்தில் ஜி.ராம கிருஷ்ணன் பேசியதாவது:
சென்ட்ரல் ரயில் நிலை யம், எழும்பூர் ரயில் நிலை யங்களை வணிக மால் களாக மாற்றி தனி யாருக்கு கொடுக்க உள்ள னர். முதலாளிகள் தொழிற் சாலைகள் தொடங்க குறைந்த விலைக்கு நிலங்களை கையகப் படுத்தி ஆட்சியாளர்கள் கொடுக்கின்றனர். அந்த தொழிற்சாலைகளுக்கு 5 ஆண்டுகள் வரிச்சலுகை, இலவச மின்சாரம் போன்றவற்றையும் தரு கின்றனர். ஆனால் ஏழை, எளிய மக்களுக்கு மட்டும் பட்டா வழங்க மறுக்கின்ற னர்.
திருவள்ளுவர் நகரில் 4.5 ஏக்கரில் 400 குடும்பங்கள் 40 வருடங்களாக வசித்து வருகின்றனர். இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த பிறகு பட்டா கேட்டு போராடும் நிலை உள்ளது. முறைசாரா வேலை செய்யும் இந்த மக்கள் தினசரி வாழ்க்கைக் கான போராட்டத்தையும், குடியிருப்புக்கான போராட் டத்தையும் இணைத்து நடத்தி வருகின்றனர். அரசு இனியும் காலம் தாழ்த்தா மல் குடிமனைப்பட்டா வழங்க வேண்டும்.
தஞ்சை பகுதியில் 1.80 லட்சம் குடும்பங்களுக்கு குடிமனைப்பட்டா பெற்றுக் கொடுத்தது செங்கொடி இயக்கம். இன்றைக்கும் நாடு முழுவதும் பட்டா கேட்டு தொடர் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தி வருகிறது. திருவள்ளுவர் நகர் பகுதி மக்களுக்கு பட்டா கிடைக் கும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக போராடும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்திற்கு எஸ். ெஜயபிரகாசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் பி.ஜெய வேல், பகுதிக்குழு உறுப்பி னர்கள் பாமிதா, பூங்கா வனம், கிளை செயலாளர் ஏ.முனியப்பன், மணிமே கலை, சோழிங்கநல்லூர் தொகுதி குடியிருப்போர் நல சங்கங்களின் பேரமைப்பு தலைவர் டி.ராமன் உள்ளிட் டோர் பேசினர்.