சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சி அலுவலகத்தில் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தில் முதற்கட்டமாக 20 பயனாளிகளுக்கு ரூ 2.10 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை பேரூராட்சித் தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் ஆகியோர் வழங்கினர். செயல் அலுவலர் செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.