சென்னை, ஆக.6 - ரூ9 ஆயிரம் குறைந்த பட்ச ஓய்வூதிய மாக வழங்க கோரி செவ்வாயன்று (ஆக.6) சைதாப்பேட்டையில் இபிஎஸ் ஓய்வூ தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாகுபாடு இன்றி தகுதியுள்ள அனை வருக்கும் முழு சம்பளத்திற்கான ஓய்வூ தியத்தை உச்சநீதிமன்றம் தீர்ப்புகள் அடிப்படையில் வழங்க வேண்டும், ஓய்வூ தியத்தை குறைக்கும் இ-609 அரசாணையை ரத்து செய்ய வேண்டும், மூத்த குடிமக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட ரயில் கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இபிஎஸ் 95 பென்சனர்கள் சங்கங்களின் தமிழ்நாடு ஒருங்கிணைப்புகுழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் துணைசெயலாளர் எஸ்.உமாகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை இபிஎப் பென்ஷனர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் கே.பி.பாபு உள்ளிட்டோர் பேசினர்.