districts

img

தகவல் தொழில்நுட்ப வசதியுடன் அவசர ஊர்திகள் அறிமுகம்

சென்னை, அக்.17– ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ஆம்  தேதி சர்வதேச காயங்கள் தினமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வருட சர்வதேச காயங்கள் தினத்தையொட்டி மேம்படுத்தப்பட்ட உயிர் காக்கும் வசதிகள்  மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய 12 புதிய ஆம்புலன்ஸ்களை ரேலா மருத்துவமனை சென்னை மாநகரம் முழுவதும் நிறுத்த உள்ளது. இந்த திட்டத்தை அடையாறு காவல் துறை துணை ஆணையர் பி. மகேந்திரன்  பெசன்ட் நகரில் கொடியசைத்து துவக்கி  வைத்தார். விழாவிற்கு ரேலா மருத்துவ மனை தலைவர் பேராசிரியர் முகமது ரேலா  முன்னிலை வகித்தார்.  அதிநவீன ஆம்புலன்ஸ்களில் மேம்பட்ட தகவல் தொழில்நுட்பங்கள் உள்ளன. இதன்  மூலம் ஆம்புலன்ஸ் இருக்கும் இடம் கண்டறியப்படுவதோடு, வீடியோ அழைப்பு மூலம் மருத்துவமனையை தொடர்பு கொள்ள முடியும். அவசர மருத்துவ உதவி  தேவைப்படும் நோயாளிகளுக்கு காணொலி  காட்சி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க  முடியும். அடுத்த சில மாதங்களில் சென்னை  நகர் முழுவதும் அடிப்படை உயிர்காக்கும் நுட்பங்கள் புத்துணர்ச்சி பயிற்சி திட்டத்தை செயல்படுத்த ரேலா மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.