districts

img

மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீடு: அம்மா உணவகத்திற்கு குடிநீர்

சென்னை, பிப். 20 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் தலையீட்டை யடுத்து அம்மா உணவகத் திற்கு குடிநீர் குழாய் வசதி  செய்துதரப்பட்டது.  அமைக்கப்பட்டது. துறைமுகம் பகுதி, 56வது வட்டம் பி.ஆர்.என்.  கார்டனில் அம்மா உணவகம்  உள்ளது. இங்கு 22 நாட்க ளாக தண்ணீர் வரவில்லை.  இதனால் உணவக ஊழியர் கள் உணவு சமைப்பதற்கும், பாத்திரங்கள் கழுவுவ தற்கும் சிரமப்பட்டனர். உணவகத்திற்கு வரும் பொதுமக்களும் கைகழுவ தண்ணீர் இன்றி அவதிப்பட்டனர். இதனையறிந்து மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் துறைமுகம் பகுதிக்குழு உறுப்பினர்கள் கே.வடி வேல், வி.செங்கேணி உள்ளிட்டோர் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். இதனை யடுத்து, உணவகத்திற் கென்று தனியாக ஆழ்துளை  கிணறு (போர்) அமைத்து,  கை பம்பு பொருத்தி கொடுத்தனர்.