சிஐடியு, மாதர் சங்கம், விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், வாலிபர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுரில் மாதர் சங்க மாவட்ட பொறுப்பாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி தலைமையில் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் ராணி, மாநகரச் செயலாளர் ரத்தினா, மாவட்ட பொருளாளர் சரஸ்வதி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், ஒன்றியத் தலைவர் தேவராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கோவிந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், ஒன்றியச் செயலாளர் ராஜாரெட்டி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன் ஆகியோர் பேசினர்.