districts

img

மருந்து கண்டுபிடிப்பு பன்னாட்டு கருத்தரங்கு: அமைச்சர் பங்கேற்பு

சிதம்பரம், ஜூன் 25- தகவல் தொழில் நுட்ப துறை யில் மாணவர்கள் முன்னேற முதல்வர் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளளார் என்று தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல், தகவல் தொழில்  நுட்ப துறை சார்பில் மருந்துக் கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்து பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் கருத்தரங்கைத் துவக்கி வைத்தார். முன்னதாக, பல்கலைக்கழக அறிவி யல் துறை தலைவர் ராமசாமி,  வரவேற்றார்.  இந்த விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில்,“உயிர்க்காக்கும் மருந்துகள் கண்டு பிடிப்பது தாமதமாகிறது. அதே நேரத்தில் கணினி அறிவிய லையும் தகவல் தொழில்நுட்பத்தை கொண்டு விரைவில் கண்டுபிடிக்க முடிகிறது” என்றார். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்த காலக் கட்டத்தி லும் மருந்து கண்ட பிடித்ததில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சிறந்து விளங்கியது என்றும் தகவல் தொழில் நுட்பம் இல்லாத துறையே இல்லை. அனைத்திலும் தகவல் தொழில் நுட்பம் பரவியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். பல்கலைக்கழக பதிவாளர் சீத்தாராமன், மலேசியா நாட்டின் மருத்துவ பல்கலைக்கழக திட்ட இயக்குநர் பழனிச்சாமி சிவனான்டி, கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் ஸ்டேன்லிமைன் சென்பிரின்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  இந்நிகழ்வில் உயிர்வேதியல் துறை தலைவர் நளினி, மக்கள் தொடர்பு அலுவலர் ரத்தினசம்பத் மற்றும் பேராசிரியர்கள், மாண வர்கள் பல்கலைக்கழக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.  முன்னதாகக் கருத்தரங்கு மலரை அமைச்சர் வெளியிட்டார். இதனைத் துணை வேந்தர் பெற்றக்கொண்டார்.