சென்னை,செப்.6- செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி சமீபத்தில் தைவானின் நேஷனல் சுங் செங் பல்கலைக்கழகத்துடன் (சிசியு) இணைந்து எதிர்கால ஆராய்ச்சி முயற்சிகள் மற்றும் உயிர் மருத்துவம் மற்றும் நிலை யான ஸ்மார்ட் சிட்டி மேம்பாடு பற்றிய சர்வதேச மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்டதொழில் வல்லுநர்கள், ஆராய்ச்சி யாளர்கள் பங்கேற்றனர். இதில் தொழில்நுட்பம், மருத்து வம் மற்றும் நிலையான வளர்ச்சியில் அதிநவீன முன்னேற் றங்களைப் பற்றி விவாதிப்பதற்கான குழு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. தொடக்க விழாவில், எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி”யின் துணை வேந்தர் டாக்டர். சி. முத்தமிழ்ச்செல்வன் பேசுகையில், புத்தாக் கத்தில் உலகளாவிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார், “இந்த மாநாடு, கல்வித்துறை, தொழில் துறை ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பின் வலிமையை நிரூபிக்கும் வகையில், சமூக முன்னேற்றத் திற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நமது கூட்டு அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது என்றார்.