districts

img

பள்ளியில் இடைநின்ற இருளர் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி தீவிரம்

சிதம்பரம், ஆக. 13- சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக் குட்பட்ட  தளபதி நகர், எம்ஜிஆர் நகர், சிசில் நகர், கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருளர் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள்.  அவர்களது குழந்தை களுக்காக அரசுப் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் படித்த 35-க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியினத்தை மாண வர்கள் கல்வியை முழுமை யாக தொடராமல் இடை யில் நின்றுள்ளனர். இதை யடுத்து, கிள்ளை பேரூ ராட்சி துணைத் தலைவர் ரவீந்திரன் தலைமையில் பேரூராட்சித் தலைவர் மல்லிகா முத்துக்குமார் உள்ளிட்ட கிராம முக்கிய நிர்வாகிகள் வீடு வீடாக சென்று இடைநின்ற மாணவர்களை அடை யாளம் கண்டு மீண்டும் பள்ளியில் படிப்பதற்கு ஏற்பாடு செய்தனர். இது குறித்து கிள்ளை பேரூராட்சி துணைத் தலை வர் கிள்ளை ரவீந்திரன் கூறு கையில்,“ஒரு காலத்தில் இருளர்கள் பாம்பு, எலி பிடிப்பதுமே தொழிலாக செய்து வந்தனர். தற்போது மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த மக்க ளின் குழந்தைகள் கல்வி அறிவு குறித்து புரிதல் இல்லாமல் உள்ளனர். எனவே, பள்ளி படிப்பை தொடர அனைத்து முயற்சி களையும் மேற்கொள் வோம்” என்றார்.