districts

img

எல்ஐசி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காப்பீட்டுக் கழக ஊழியர்கள் தர்ணா போராட்டம்

எல்ஐசி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்ட துணைத் தலைவர் நாகராஜன் தலைமையில் புதுச்சேரி சாரம் ஜீவானந்தம் சிலை எதிரே தர்ணா போராட்டம் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம், லிக்காய் கோட்ட சங்கத்தின் தலைவர் அன்பரசி ஜூலியட், பொருளாளர் தாண்டவக் கிருஷ்ணன், ஓய்கூதிய சங்கத்தின் நிர்வாகி மணவாளன் உள்ளிட்டோர் பேசினர். இதில் கோட்டச் சங்க நிர்வாகிகள் ெஜயஸ்ரீ, ஜானகிராமன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


எல்ஐசி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் கோட்டத் தலைவர் பழனிராஜ் தலைமையில் வேலூர் கோட்ட அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் எஸ்.ராமன், துணைத் தலைவர் தேவராஜ், முகவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தா.வெங்கடேசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், மாநகர தொழிற்சங்க கன்வீனர் சி.ஞானசேகரன், அஞ்சல் துறை ஊழியர் சங்கத்தின் செயலாளர் பெருமாள், வி.குபேந்திரன் (ஜிஐசி) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.