சென்னை, டிச. 10- மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு முதல் திங்கட்கிழமை வரை அதி கனமழை தொடர்ந்து பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் கூட சில பகுதிகளில் முழுமையாக தண்ணீர் வடியவில்லை. எப்போது இயற்கை சீற்றம் நிகழ்ந்தாலும் எளிய மக்களின் துயர் துடைக்க அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் களத்தில் இறங்கி பாதிக் கப்பட்டவர்களுக்கு தேவையான உதவி களை செய்து வருகிறது. தற்போது சமீபத்தில் வீசிய புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ களத்தில் இறங்கியுள்ளனர். அதன் ஒருபகுதியாக காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சென்னை கோட்டம் 2இன் சார்பில் முதற்கட்டமாக வடசென்னை மாவட்டத்திற்குட்பட்ட திருவிக நகர், ஆர்.கே.நகர், ராயபுரம் ஆகிய பகுதிகளில் அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டி.செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் ஆர்.சர்வ மங்களா, வி.ஜானகிராமன், கே.மனோகரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்பு தலைவர் எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நிவாரண உதவிகளை வழங்கினர். மணலி கடப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் 400 குடும்பங்களுக்கு கோட்ட சங்கத்தின் துணைத்தலைவர் வி.ஜானகி ராமன், டி.நடராஜன் (கிளை - 27) ஆகியோர் பால் பாக்கெட்டுகளை வழங்கி னர்.