districts

கேபிள், இணைய நிறுவனங்கள் வாடகை செலுத்த அறிவுறுத்தல்

சென்னை, மார்ச் 16 - கேபிள் டிவி, இணைய தள சேவை நிறுவனங்கள் சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தட வாடகை மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார். மாநகர பகுதிக்குள் தெரு விளக்கு மின்கம்பங்களில் கேபிள் டிவி, இன்டர்நெட் ஒயர்கள் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டு தட வாடகை வசூலிக்கப்படு கிறது. இணைய தள சேவை நிறுவனங்கள் சார்பில் தனி  கம்பங்கள் அமைத்தும்  இணையதள இணைப்பு ஒயர்கள் எடுத்துச் செல்லப் படுகிறது. இவற்றில் உப யோகமில்லாத மற்றும் தடவாடகை செலுத்தாத நிறுவனத்தின் ஒயர்களை அகற்றுதல் மற்றும் ஒழுங் குப்படுத்தும் பணிகள்  தொடர்ந்து மேற்கொள் ளப்பட்டு வருகிறது. எனவே,  தடவாடகை மற்றும் நிலு வைத் தொகையை உடன டியாக செலுத்துமாறு ஆணையர் அறிவுறுத்தி யுள்ளார்.