ராணிப்பேட்டை, நவ. 5 – ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், விளாப்பாக்கம் பேரூராட்சியில் விளாப்பாக்கம் சின்னத்தக்கை மருத்துவம் பாடி வரையில் 1.87 கி.மீ நீளத்திற்கு கலை ஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 1.26 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை செவ்வாயன்று (நவ. 5) மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து விளாப்பாக்கம் பேரூராட்சி யில் குப்பைகள் தரம் பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மை மையம், விளாப்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பள்ளிக் கட்டடம், பெரிய ஏரியை பார்வையிட்டார். பாலமதி மலையில் இருந்து விளாப்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் தரைப்பாலம் பகுதியில் தூர்வாரும் பணி கள் தொடங்கப்பட்டுள்ளது. பார்வையிட்டு கேட்டறிந்தார். புதிய மாவட்ட கிளை நிர்வாக கட்டிடம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் உதவி இயக்குநர் பேரூராட்சிகள் ஞானசுந்தரம், பேரூராட்சி தலைவர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் அம்சா, பேரூராட்சி செயல் அலுவலர் அர்ஜுனன், வட்டாட்சியர் பாக்கியலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.