ராணிப்பேட்டை, மே 21- ராணிப்பேட்டை தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் வாலாஜா டோல்கேட் அருகே அமைந்துள்ள சவுத் இந்தியா அசோஷியேஷன் லேப் ஆகிய இடங்களில் தமிழ்நாடு தொழில் துறை ஆணையர் மற்றும் தொழில் இயக்குனர் நேற்று ஆய்வு செய்தார். நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ராணிடெக் தலைவர் ரமேஷ் பிரசாத், மத்திய தோல் ஏற்றுமதி கழக தென் மண்டல தலைவர் மெக்ஹா இஸ்ராத் அஹம்மத் ஆகியோர் முன்னிலை வகித்த னர். இந்த ஆய்வில் தமிழ்நாடு தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில் வணிகத் துறை இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன் வருகை புரிந்து ராணிப்பேட்டை தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் வாலாஜா டோல்கேட் அருகே அமைந்துள்ள சௌத் இந்தியா அசோசியேஷன் லேப் ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் ராணிப்பேட்டை தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ராணிப்பேட்டையில் உள்ள 92 தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ராட்சத குழாய்கள் மூலம் ராணிப்பேட்டை தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்ட நல்ல நீரை மீண்டும் மேற்கண்ட 92 தொழிற்சாலைகளுக்கு மறு சுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. 6 கிலோ மீட்டர் தொலைவிற்கு குழாய்கள் மூலம் தண்ணீர் பெறப்பட்டு மீண்டும் மறு சுழற்சி செய்யப்பட்டு தொழிற்சாலைக ளுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. சுத்த கரிப்பு நிலையத்தில் பூஜ்ய கழிவு நீர் வெளியேற்றம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை கழிவுநீர் பிரித்தெடுக்கும் தொட்டி கள், பிரித்தெடுக்கப்பட்ட நீரை சுத்திகரிப்பு நிலையம், கழிவுகளிலிருந்து உப்புகள் தயாரிக்கும் நிலையங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து வாலாஜா டோல்கேட் அருகில் அமைந்துள்ள சௌத் இந்தியா தோல் தொழிற்சாலை முகவர் அசோசியேஷன் அலுவலகத்தில் தோல் பொருட்கள் தரத்தினை உறுதிப்படுத்தும் மையத்தில் தோல் உற்பத்தி பொருட்கள் தர உறுதிப்படுத்தும் செயல்முறைகளை பார்வையிட்டு கேட்டறிந்தார். அங்கு ஷீ, காலனிகளில் உள்ள வேதிப் பொருட்கள் பிரித்தெடுப்பதையும் ஆய்வு செய்தார். பின்னர் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.