செல் கோபுரம் அமைக்க வலியுறுத்தல்
திருவள்ளூர், நவ.27- திருவள்ளூர் மாவட்டம், பெரிய பாளையம் ஊராட்சியில் மட்டும் 10,000 மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதனை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. மேலும் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு தினம் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பணம் பரிமாற்றம், பல்வேறு தகவல் தொடர்புகள், என எல்லாம் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. ஈமெயில், வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலம் வர்த்தகம், கடித போக்குவரத்து, ரயில், பேருந்து பயணச்சீட்டு பதிவு, இப்படி அன்றாட நடைமுறைகள் என அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் எல்லாம் டிஜிட்டல் உலகமாக மாறி வருகிறது. இந்த நிலையில் பெரியபாளைம் பஜாரில் பிஎஸ்என்எல் செல் போன் சிக்னலுக்கான டவர் அமைக்காததால் பிஎஸ்என்எல் சிம்கார்டு பயன்படுத்துபவர்களுக்கு சிக்னல் கிடைக்காமல் அவதி படுகின்ற னர். இதனால் பலர் தனியார் கம்பெனிக்கு மாறுகின்றனர்.இதனை தடுக்க பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ பாதுகாக்கும் வகையில் பெரியபாளையம் பஜாரில் பிஎஸ்என்எல் செல் போன் சிக்னலுக்கு டவர் அமைக்க வேண்டும். அதே போல மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து பிஎஸ்என்எல் சிம் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்க பிஎஸ்என்எல் சிம் கார்டுக்கு சிக்னல் கிடைக்க டவர்களை அமைக்க வேண்டும். மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பிஎஸ்என்எல் சிக்னல் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனை நிர்வாகம் கவனத்தில் கொண்டு டவர்களை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்கோட்டை வட்ட செயலாளர் ஏ.ஜி.கண்ணன் வலியுறுத்தியுள்ளார்.
ரூ.2,500 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்
சென்னை,நவ.27- பரங்கிமலை மற்றும் பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆக்கிரமித்து உள்ளதாகவும் அதில் பல ஆண்டு காலமாக கட்டிடங்கள் இயங்கி வருவதாகவும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்தன. இதை யடுத்து அரசு நிலங்களை ஆக்கிரமித்த வர்கள் மற்றும் அதில் கட்டிடம் கட்டி குடியிருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த் துறையினர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பல்லாவரம் தாசில்தார் தலை மையில் காவல்துறை உதவியுடன் அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்க தொடங்கினர். பரங்கிமலை மற்றும் கண்டோன்மெண்ட் சுற்றியுள்ள பகுதிகளில் அரசுக்கு சொந்தமான சுமார் ரூ.2,500 கோடி மதிப்புள்ள 15 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட இந்த இடங்களில் அரசு கட்டிடம் மற்றும் மெட்ரோ ரயில் பணிகளுக்கான இடம், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்றலாம் என்று வரு வாய்த்துறை மூலம் ஆலோசனை நடை பெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் சிலர் தங்களிடம் இடத்திற்கான 300 வருட பத்திரங்கள் மற்றும் பட்டா உள்ளது என்று தெரிவித்து வரு கின்றனர். இது போன்ற ஆவணம் அதி காரிகளிடம் இல்லை. இதனால் வருவாய் துறை அதிகாரிகள் தவறாக சீல் வைத்து விட்டதாக பாதிக்கப்பட்ட சிலர் குற்றம் சாட்டி உள்ளனர்.
1.5 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை, நவ.27- சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த மண்ணடி மரக்காயர் தெருவை சேர்ந்த அஷ்ரப் (30) என்பவர் உட்பட சிலர் சிக்கி னர். அவர்களிடம் இருந்து 6 கிலோ தங்கம் பறி முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணையில் அவர்கள் குருவியாக சென்று தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மத்திய வரு வாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திங்க ளன்று மண்ணடியில் உள்ள அஷ்ரபின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோத னையில் 1.5 கிலோ தங்கம், ரூ.35 லட்சம் பணம் பறி முதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அஷ்ரப்பை அதிகாரிகள் விசாரணைக்காக மத்திய வருவாய் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் தங்கம் கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன
சென்னை, நவ. 27 மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா நடைபெறும். இக்கோவிலை ஒட்டி குளம் ஒன்றும் உள்ளது. இக்குளத்தில் தேரோட்டம் நடைபெறும். இந்நிலையில், கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது. இதை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். மீன்களின் இறப்புக்கான காரணம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் திடீர் மரணம்
சென்னை, நவ. 27- சென்னை வளசரவாக்கம் போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் திடீர் மரணமடைந்ததைத் தொடர்ந்து உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை வளசரவாக்கத்தில் வினோத்குமார் என்பவர் போதை மறுவாழ்வு மையம் நடத்தி வருகிறார். இந்த மையத்தில் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் விஜய் என்பவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், போதைக்கு அடிமையான விஜய் திடீரென மரணம் அடைந்தார். இதுகுறித்து விஜய் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், போதைக்கு அடிமையான விஜய்யை கடுமையாக தாக்கியதன் காரணமாக மரணம் அடைந்திருக்க கூடும் என்ற கோணத்தில் விசாரித்துள்ளனர். இதுகுறித்து போதை மறுவாழ்வு மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறை யினர் ஆய்வு செய்தபோது, சிசிடிவி பதிவுகள் அழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் வினோத்குமார், கணக்காளர் க்ரூஸ், பணியாளர் விஜய் ஆகி யோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் வினோத்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் செயற்கை வைரங்கள் மதிப்பற்றவை
சென்னை.நவ.27- கடந்த 8 ஆண்டுகளாக வைர உற்பத்தி மற்றும் விற்பனை தொழிலானது குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டு வருகிறது. ஆய்வகங்களில் செயற்கையாக தயாரிக்கப்படும் வைரத்தின் விலைகள் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு அதிகரித்துள்ளன. இது வாடிக்கையாளர்களின் நீண்டகால முதலீட்டு திறனை பாதிக்கிறது. இந்த செயற்கை வைரங்கள் முதன் முதலாக சந்தைக்கு வந்தபோது, அவை இயற்கை வைரங்களுக்கு சற்று விலை குறைந்த மாற்றாகக் கருதப்பட்டன. 2016-ம் ஆண்டில், 1 காரட் செயற்கை வைரம், இயற்கை வைரத்தைக் காட்டிலும் 10 சதவீதம் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இருப்பினும், 2022-ம் ஆண்டின் இறுதிக்குள், உற்பத்தியாளரைப் பொறுத்து விலை வேறுபாடு மாறுபட்டதோடு வியத்தகு முறையில் 80 சதவீதம் வரை விரிவடைந்தது. எனவே ஆய்வகங்களில் தயாரிக்கும்செயற்கை வைரங்கள் மதிப்பற்றவை என்றும் இயற்கை வைரத்திற்கே மதிப்பு என்றும் ஆய்வாளர் பால் ஜிம்னிஸ்கி தெரிவித்துள்ளார்.
முகத்துவாரத்தில் சுவர்: தேசிய வனவிலங்கு வாரியம் ஒப்புதல்
திருவள்ளூர்,நவ.27- பழவேற்காடு முகத்துவாரத்தில் ஏற்பட்ட கடல் மணல் அடைப்பு காரண மாக நீரோட்டம் பாதிக்கப்படுவதை தடுக்க சுவர் கட்ட தேசிய வனவிலங்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் மண் சேர்ந்து அடைப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரி நீர் கடலுக்கு செல்வது தடைபடுவ தோடு ஏரியின் ஆழம் குறைந்து காணப்படு கிறது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ரூ.27 கோடியில் திட்டமிடப்பட்டு பணி துவக்கப்பட்டது. ஆனால் மத்திய வனவிலங்கு துறை அனுமதி கிடைக்காததால் பணிகள் தொடர்ந்து நடைபெறவில்லை. இதனால் தற்போது முகத்துவாரப் பகுதி முழுவதும் மணலால் அடைபட்டு மீனவர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதற்கிடையே பழ வேற்காடு முகத்துவாரப் பகுதியில் கற்கள் கொட்டி முகத்துவார சுவர் கட்ட மத்திய வனவிலங்கு வாரியம் அனுமதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 17 ஆம் தேதி டெல்லியில் நடை பெற்ற தேசிய வனவிலங்கு வாரிய கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. முகத்துவாரத்தின் இருபுறமும் தலா 160 மீட்டர் மற்றும் 150 மீட்டர் என 2 சுவர்கள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட இருப்பதாக கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் தெரி வித்துள்ளார். எனவே விரைவில் பழவேற்காடு முகத்துவார பணி தொடங்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, முகத்துவாரத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக நீரோட்டம் பாதிக்கப் படுவதால் நீர் பரிமாற்றம் தடைபடுகிறது. இதனால் கடல் உயிரினங்கள் முட்டை போட ஏரிக்கு வராததால் மீன்பிடித்தல் குறைந்து வருகிறது. முகத்துவார பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் என்றார்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை
சென்னை, நவ. 27- சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பு தொடர்பாக கூடுதல் ஆணையர் சுதாகர் ஆய்வு செய்தார். சென்னையில் விபத்துகள், விபத்து உயிரிழப்புகள் மற்றும் நெரிசலை குறைக்க போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதி யாக, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, நவீன கருவி மூலம் வாகன நெரிசலை கண்காணித்து, தேவைக்கேற்ப போக்கு வரத்து மாற்றங்களை செய்து வரு கின்றனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும், இது பற்றி வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகிய பணிகளில் காவல் துறையினர் மட்டுமின்றி, போக்குவரத்து வார்டன்கள், தனியார் நிறுவனத்தை சேர்ந்த 600 மார்ஷல்கள் ஈடுபட்டு வரு கின்றனர். ட்ரோன் கேமரா மூலம் போக்கு வரத்து நெரிசலை கண்காணித்து, அதை சரிசெய்யவும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நெரிசலை குறைக்கும் வகையில், தேவையின்றி வாகனங்களில் நிற்காமல் சீரான வேகத்தில் செல்லும் வகையில் பல சாலைகளில் புதிதாக ‘யு’ வளைவு வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் அனைத்தும் முறையாக செயல்படுத்தப்படுகிறதா, இத்தகைய ஏற்பாடுகளை தாண்டி, எங்காவது வாகன நெரிசல் ஏற்படுகிறதா என அறிய இந்த ஆய்வு செய்யப்படுகிறது.
வாலிபர் சங்க கோரிக்கை ஏற்பு: தள்ளபாடியில் பரிசோதனை முகாம்
கிருஷ்ணகிரி,நவ.27- கடும் வெயில் மற்றும் வறட்சியாக உள்ள சிங்காரப் பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பொதுமக்கள் சிலருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்களுக்கு காய்ச்சல் பரி சோதனை முகாம் நடத்த வேண்டும் என்று சிங்காரப் பேட்டை பகுதி வாலிபர் சங்கம் சார்பில் செயலாளர் மாரி முத்து தலைவர் சுபாஷ் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று காலை கடிதம் அளித்தனர். கோரிக்கையை ஏற்று உடனடியாக சிங்காரப்பேட்டை பகுதி பெரிய தள்ளப்பாடி ஊராட்சி அலுவலகம் அருகில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் மருத்துவர் நித்யா, ஊழியர்கள் வளர்மதி, ராணி, தமிழன்பன், கோபி, கலந்து கொண்டு பரி சோதனைகளை செய்தனர்.இந்த கிராமத்தை சேர்ந்த 80 பேர் பரிசோதிக்கப்பட்டன. கோரிக்கையை ஏற்று இந்த முகாம் நடத்திய மருத்துவர் மற்றும் ஊழியர்களுக்கு வாலிபர் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
குழுக்கள் அமைப்பு
சென்னை,நவ.27- சென்னையில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை அடங்கிய 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குட்கா சோதனை குழு வில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவரும், இரு காவலர்கள் இடம் பெற்றுள்ளனர். கடைகளில் 3 கிலோ வுக்குள் குட்கா விற்பனை செய்யப்பட்டால் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்வு
சென்னை, நவ. 27- தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. சென்னையில் திங்களன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.46,240-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,780-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.30 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50க்கும், பார் வெள்ளி ரூ.81,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை மீண்டும் உயர்வு
கிருஷ்ணகிரி,நவ.27- கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ராயக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இங்குள்ள விவசாயிகள் பெரும்பாலானவர்கள் கமிஷன் மண்டிகளில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த வியாபாரிகள், இங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். தற்போது இப்பகுதியில் தூரல் மற்றும் சாரல் மழை பெய்து வருவதால் பெருமளவில் விளைச்சல் பாதிக்கப்பட்டு தக்காளி வரத்து குறைந்துள்ளது. ஏற்கனவே கிலோ 40,50 ரூபாய் என விற்று வரும் நிலையில் ராயக்கோட்டை பகுதியில் தக்காளி விளைச்சல் குறைவு காரணமாக மேலும் உயர்ந்துள்ளது.