சென்னை, நவ. 20- வள்ளலார் நகர் சாலையோர சிறுகடை விற்பனையாளர்களுக்கு கடைகளை முறையாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி வள்ளலார் நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை நடை பாதை சிறுகடை வியாபாரிகள் சங்கம் சார்பில் 5வது மண்டல செயற்பொறி யாளர் சொக்க லிங்கத்தை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், சென்னை வள்ளலார் நகர் அரசு அச்சகத்தின் வெளிப்புற சுவர் ஓரத்தில் சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் 131 பேர் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். இங்கு விற்பனை செய்யக்கூடாது என்று மறைந்த டிராபிக் ராமசாமியால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி ராமமூர்த்தி 2007ஆம் ஆண்டு இத்த பகுதி சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் விற்பனை செய்யக்கூடிய பகுதி என்று தீர்ப்பு வழங்கினார். அந்த அங்கீ காரத்தின் அடிப்படையில் மாநகராட்சி யால் வழங்கப்படும் விற்பனை யாளர்கள் அடையாள அட்டையும் வைத்துள்ளனர். ஆனால் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கி 12 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் இவர்களுக்கு முறையாக கடைகள் ஒதுக்கித் தரப்படவில்லை. இதனால் வியாபாரி களின் வாழ்வாதாரம் சிதிலமடைந்து ஆங்காங்கே விற்பனை செய்யக்கூடிய நிலை உள்ளது. சாலையோர சிறுகடை விற்பனையாளர்களுக்கு கடை களை முறையாக அளவீடு செய்து ஒதுக்கவும், மின்சாரம் வழங்கவும் தாங்கள் ஆவணம் செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் எம்.சி, ரோடு, ஜி.ஏ. சாலையில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை பண்டிகை காலம் வருவதையொட்டி பொது மக்க ளுக்கும், வியாபாரிகளுக்கும் பாதிப்பு இல்லாமல் பொங்கல் பண்டிகை முடியும் வரை பணிகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு ஆவன செய்வதாக அதிகாரி உறுதியளித்தார். இதில் சென்னை மாநகர வியா பாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செய லாளர் எம்.வி.கிருஷ்ணன், துணைத் தலைவர் முஸ்தபா, சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.வெங்கட், நகர விற்பனைக் குழு உறுப்பினர்கள் கே.பலராமன், ஜி.மோனிஷா, நாக பூஷ்ணம், சித்ரா, பாலமுருகன், சிபிஎம் ராயபுரம் பகுதி செயலாளர் எஸ்.பவானி, எம்.சி. ரோடு வணிக வளாக சங்கத்தின் தலைவர் கே.செல்வானந்தன், வள்ளலார் நகர் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் எம்.தமிம்சேட் ஆகியோர் கலந்து கொண்டனர்.