கடலூர், ஜூன் 2- கொண்டங்கி ஏரியை பாதுகாக்க வேண்டும் என குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப் பின் பொதுக்குழு கூட்டம் தலைவர் பி.வெங்கடேசன் தலைமையில் நடை பெற்றது. உதவிதலைவர் பச்சையப்பன் வரவேற்றார். பொதுசெயலர் எம்.மருத வாணன் கடலூர் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து பேசினார். உதவிப் பொதுசெயலர் தேவநாதன் நன்றி கூறினார். தீர்மானங்கள் கடலூர் கொண்டங்கி ஏரியையும், புகழ்மிக்க கனிம வளங்கள் நிறைந்த கேப்பர் மலையையும் சுற்று சூழல் சமநிலை கருதி ஆக்கிர மிப்பு இல்லாமல், கனிம வளங்கள் கொள்ளையடிக் கபடாமல் பாதுகாக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய பேருந்து நிலையத்தை விரிவுபடுத் தியோ அல்லது முன்பு தீர்மானித்த மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகிலோ அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூரில் சாலை விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. இதை தடுக்க காவல் துறையும், மாவட்ட நிர்வாக மும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் துறைமுகம் பயணிகள் போக்குவரத்து துறைமுக மாக மாற்றப்பட வேண்டும். கெடிலம் ஆறு பெண் ணையாறு முகத்து வாரத்தில் இருந்து உள்ளே 4 கி.மீ. வரை ஆக்கிரமிக்க ப்பட்டுள்ளதால் கரைகள் பலமிழந்துள்ளன. இதனால் பெரு மழைக் காலத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்துகிறது. எனவே இரு ஆறுகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரையை உயர்த்தி வெள்ள தடுப்புச் சுவர் கட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்போர் கூட்ட மைப்பின் மாநாட்டை வரும் ஜுலை 22ஆம் தேதி நகர அரங்கில் அனைத்து மக்கள் பிரதிநிகளையும் அழைத்து நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.