districts

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி,ஜூலை 3-

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், சிகரலப்பள்ளி யில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  

   பர்கூர் வட்டம் சிகரலப்பள்ளி மத்தூர் கூட்ரோடு  மாந்தோப்பில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த  கடையில் விற்பனையாளர், பாரில் வேலை செய்தவரையும் தாக்கி ரூ. 4 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற னர்.

    மேலும், அப்பகுதியில் மாணவிகள் பள்ளிக்கு சென்று வருவதற்கு, பொது மக்கள் மாலை 4 மணிக்கு மேல் நடமாடு வதற்கும் பயப்படுகிறார்கள்.  

    எனவே, இந்த கடையை அகற்றக்கோரி கிருஷ்ணகிரி அலுவலகத்தில் இரு முறை பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

     எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிடில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மாவட்டச் செய லாளர் ஜி.கே.நஞ்சுண்டன், பர்கூர் பகுதி சீனிவாசன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.