districts

img

புதுச்சேரியில் இந்திய - பிரெஞ்சு திருவிழா

புதுச்சேரி, பிப்.16- புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் இந்திய - பிரெஞ்சு திருவிழா புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில்  துவங்கியது.   துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்றனர். புதுச்சேரி பிரெஞ்சு தூதர் ஜெனரல் எத்தியன் ரோலண்ட் பிகுய், சட்டப்பேரவை தலைவர் செல்வம் சட்டமன்ற உறுப்பி நர் அனிபால் கென்னடி, தலைமைச் செயலாளர் சரத் சவுகான், சுற்றுலாத்துறை செயலர் மணிகண்டன் இயக்கு னர் முரளிதரன் உட்பட பலர் விழாவில் பங்கேற்றனர். முன்ன தாக பிரெஞ்சு நாட்டு பாரம்பரிய கலைஞர்களின் நடனம், புதுச்சேரி சேர்ந்த தப்பாட்ட கலைஞர்களின் கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் பாரம்  பரிய கலை நிகழ்ச்சிகள் கடற்கரை சாலையில்  நடை பெறுகிறது.