சென்னை, ஜூன் 6 - இந்திய அரசியல் நிர்ணய சபை யில் நடைபெற்ற விவாதங்களை நூல் வடிவில் தொகுக்க உள்ளதாக வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் தென் சென்னை மாவட்ட 15வது மாநாடு ஜூன் 4, 5 தேதிகளில் போரூரில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஒன்றை உருவாக்க வேண்டும். இளம் படைப்பாளிகளின் கதைகளை தேர்வு செய்து அரசே திரைப்படங்களை தயாரிக்க வேண்டும். மாவட்டம் தோறும் அரசு திரையரங்குகளை அமைக்க வேண்டும். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படங்க ளுக்கு 50 விழுக்காடு மானியம் தர வேண்டும். கேரள அரசை போன்று தமிழக அரசும் ஓடிடி தளம் ஒன்றை தொடங்க வேண்டும். சென்னை நகர சாலைகளுக்கு தமிழ் இலக்கிய ஆளுமைக ளின் பெயர் சூட்டும் மாநகராட்சி தீர்மானத்தை செயல்படுத்த வேண்டும். வட்டம்தோறும் இலக்கிய நிகழ்வுகளை நடத்துவதற்கு அரங்குகளை அமைத்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அறக்கட்டளை
மாநாட்டின் ஒரு பகுதியாக முன்னோடிகள் சிகரம் ச.செந்தில் நாதன், மு.சி.பலராமன், தா.பி.வரத ராஜன் ஆகியோர் சிறப்பிக்கப்பட்ட னர். அப்போது பேசிய சிகரம் ச.செந்தில்நாதன், “சென்னை பல் கலைக் கழகத்தில் கவிஞர் தமிழ் ஒளி அறக்கட்டளை கொண்டு வருவ தற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது” என்றார். “இதுவரை தாம் எழுதிய நூல்கள் அனைத்தும் முன்னோட்டம்தான். இனிதான் முழுமையாக எழுதப் போகிறேன். இந்திய அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவா தங்கள் குறித்து தமிழில் நூலை கொண்டு வர உள்ளேன். முற்போக்கு இலக்கியம் குறித்த ஆங்கில நூலையும் கொண்டு வர உள்ளேன். அநேகமாக இந்த நூல்கள் அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் வரக்கூடும்” என்று தெரிவித்தார். மாவட்டத் தலைவர் சி.எம்.குமார் தலைமை தாங்கினார். மாநாட்டை செயற்குழு உறுப்பினர் நாகட வியலாளர் பிரளயன் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் பகத்சிங் கண்ணன் வேலை அறிக்கை யும, பொருளாளர் கி.கமலக் கண்ணன் வரவு செலவு அறிக்கை யும், துணைச் செயலாளர் அசோக் சிங் கலை இலக்கிய அறிக்கையும் சமர்ப்பித்தனர். மாநில துணைச் செயலாளர் கி.அன்பரசன், செயற்குழு உறுப்பி னர்கள் மயிலை பாலு, சைதை ஜெ., கவிஞர் ஏகாதசி, மாநிலக்குழு உறுப் பினர் க.மலர்விழி, ஃபாமிதா, வரவேற்புக்குழுத் தலைவர் க.நட ராஜன், திரைப்பட தயாரிப்பாளர் சி.வி.குமார், இயக்குநர் ரவிக் குமார், எழுத்தாளர்ய ஜெராணி, வழக்கறிஞர் சாந்தகுமாரி உள்ளிட் டோர் பேசினர். மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா நிறைவுரையாற்றினார்.
நிர்வாகிகள்
சங்கத்தின் மாவட்டத் தலை வராக பகத்சிங் கண்ணன், செயலா ளராக அசோக்சிங், பொருளாளராக ஐ.சரத்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டின் நிறைவாக நடை பெற்ற ஊர்வலத்தில் விடுதலைப் போராட்ட வீரர்கள் வேடமிட்டு வந்த குழந்தைகளுக்கு காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மதுரவாயல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ் உள்ளிடடோர் பரிசுகளை வழங்கி பேசினர். இதனைத்தொடர்ந்து நாடகம், கானா, ராப் பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.