districts

img

இந்தியன் காபி அவுஸ் சங்க தேர்தல் 13 முறையாக சிஐடியு மகத்தான வெற்றி!

புதுச்சேரி, மே 26-

     இந்தியன் காபி அவுஸ் சிப்பந்திகள் கூட்டு றவு சங்க இயக்குநர் தேர்தலில் ஒட்டு மொத்தமாக அனைத்து இடங்களையும் கைப்பற்றி சிஐடியு 13ஆவது முறையாக வெற்றிபெற்று சாதனை படைத்ததுள்ளது.

    இந்தியன் காபிஅவுஸ் கூட்டுறவு தொழி லாளர் சங்கம் மூலம் உணவு மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படுகிறது. புதுச்சேரியை தலைமை இடமாகக் கொண்டு, தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சி புரம் உள்ளிட்டு 8 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இதில் பணிபுரியும் தொழி லாளர்களிடையே சிக்கன சேமிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் இந்தியன் காபி ஹவுஸ் கூட்டுறவு சங்கம் கடந்த 1980ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

   புதுச்சேரி கூட்டுறவுதுறையின் கீழ் இணைக்கப்பட்டுள்ள இச்சங்கத்தின் நிர்வாகக்குழு தேர்தல் மே 25ஆம் தேதி நடைபெற்றது. 8 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வுக்கு நடைபெற்ற தேர்தலில் சிஐடியு, ஐஎன்டியூசி, பிஎம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன. தேர்தலில் 107 தொழிலாளர்கள் வாக்க ளித்தனர்.

    தேர்தல் முடிவு அன்றே வெளியிடப் பட்டது. இதில் சிஐடியு சங்கத்தின் சார்பில் போட்டியிட்ட சிவச்சந்திரன், ஷிபு, ஆறுமுகம், ஸ்ரீஜித், வினோத்குமார், மதுக்குமரன் நாயர், ரவி, யுவராஜ், ஆகிய 8 பேரும் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். தொடர்ந்து 13ஆவது முறையாக சிஐடியு வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

வாழ்த்து

    தேர்தலில் வெற்றி  பெற்ற வேட்பாளர்கள் இந்தியன் காபி ஹவுஸ் தொழிலாளர் சங்க கவுரவத்தலைவர் த.முருகன், சங்கத் தலைவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், சிஐடியு மாநிலத் தலைவர் பிரபுராஜ், செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் ராமச்சந்திரன், மரியசூசை ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.