districts

img

நகர்புறங்களில் அதிகரித்து வரும் வளர்சிதை மாற்ற தொற்றாநோய்கள்

சென்னை,ஜூன் 8-

   நாட்டில் நீரிழிவு மற்றும் தொற்றா நோய்கள்  (என்சிடி) தொடர்பான மிக  விரிவான ஆய்வினை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நிதியுதவியுடன் சென்னை நீரிழிவு ஆராய்ச்சிமையம்  நடத்தியது.  

   ஆய்வு அடிப்படையி லான ஓர் புதிய ஆய்வுக்  கட்டுரை, உலக அளவில்  பெரிதும் அங்கீகரிக்கப் படும் “தி லான்செட் நீரிழிவு மற்றும் நாளமில்லாச் சுரப்பி யில்” என்னும் மருத்துவ  இதழில் வெளியிடப்பட்டுள் ளது. அதில்         கிட்டத்தட்ட  அனைத்து வளர்சிதை மாற்ற தொற்றா நோய்க ளும் (NCDs) கிராமப்புறங்க ளுடன் ஒப்பிடுகையில் நகர்ப் புறங்களில் அதிகமாகக் காணப்படுவது தெரியவந் துள்ளது.

    தொற்றா நோய்களின் (NCDs) பரவலில், மாநிலங் களுக்கு இடையே பலதரப் பட்ட வித்தியாசங்கள் உள்ளன.  

    நாட்டின் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் 1லட்சத் திற்கும் மேற்பட்ட நபர்க ளிடம் ஆய்வு நடத்தப் பட்டது.    நீரிழிவு, உயர் ரத்த  அழுத்தம், உடல் பருமன்,  டிஸ்லிபிடெமியா (Dyslipidaemia) போன்ற வளர்சிதை மாற்ற தொற்றா நோய்களின் பரவலை மதிப்பீடு செய்தது.

    இந்த ஆய்வின்படி, 2021 ஆம் ஆண்டில் இந்தி யாவில் 10 கோடிக்கும் அதிக மானோர் நீரிழிவு நோயா லும், ஒருகோடியே 36 லட்சம்  பேர் இயல்பான ரத்த சர்க்கரை அளவுக்கும் நீரி ழிவு நோய்க்கும் இடைப் பட்ட நிலையில் உள்ளனர். 3 கோடியே 15 லட்சம்பேர்  உயர் ரத்த அழுத்தத்தாலும், 2கோடியே 50 லட்சம் பேர்  பொதுவான உடல் பருமனா லும் பாதிக்கப்பட்டு இருக் கிறார்கள் என சென்னை நீரி ழிவு ஆராய்ச்சி அறக்கட்ட ளையின் தலைவரான டாக்டர். ஆர். எம். அஞ்சனா   கூறினார்.  

   கிராமப்புறங்களில் முன்பு கண்டறியப்பட்டதை விடக் கணிசமான அளவுக்கு தொற்றா நோய் பரவல் விகிதங்கள்  ஆய்வின் மூத்த ஆசிரியரும் பிரபல நீரிழிவு  மருத்துவநிபுணரான  டாக்டர் வி.மோகன் தெரி வித்தார்.