districts

img

குப்பைகளை பாதுகாப்பின்றி மறுசுழற்சி செய்வதால் மூச்சு திணறல் பாதிப்பு அதிகரிப்பு

சென்னை, செப். 17- சென்னையில் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் நடைபெற்று வரும் பயோ மைனிங் மறுசுழற்சி திட்டத்தினால், அப்பகுதி களில் காற்று மாசுபாடு மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவது பெரிதும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள் ளது. சென்னை நகரத்தில் தினசரி 5,000 மெட்ரிக் டன் குப்பை உருவாகிறது. வடசென்னையில் கொடுங்கையூர், தென் சென்னையில் பெருங்குடி ஆகிய இரண்டு குப்பை கிடங்குகளில் கடந்த 40 ஆண்டு களாக தொடர்ந்து குப்பை கொட்டப் படுகிறது. 225 ஏக்கர் பரப்பளவில் பள்ளிக் கரணை சதுப்பு நிலத்தில் பெருங்குடி குப்பை  கிடங்கு அமைந்துள்ளது. ரூ.350 கோடி செலவில் பயோ மைனிங் எனும் மறுசுழற்சி திட்டம் மூலம் குப்பைகள் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக குவிந்துள்ள 30 லட்சம் மெட்ரிக் டன் குப்பையை முழுமை யாக மறுசுழற்சி செய்து அந்த நிலப் பகுதி யில் சுமார் 100 ஏக்கர் நிலத்தில் ஒரு சுற்றுச் சூழல் பூங்கா ஒன்றை அமைக்கும் முயற்சி யில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. குப்பைகளை மறுசுழற்சி செய்ய ரூ.180 கோடி மதிப்பில், தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இதில் பிளாஸ்டிக், துணி, கற்கள், மண், காந்தம்  என பல வகையாக குப்பைகள் பிரிக்கப் பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் மாற்று எரி சக்தியாக மாற்றபடுகிறது. மறுசுழற்சியில் கிடைக்கும் மண் உரமாக மாற்றப்படுகிறது. ஆனால் பயோ மைனிங் திட்டம் தொடங்கி யதில்  இருந்து அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செய லாளர் எல்.சுந்தரராஜன் கூறுகையில், பல ஆண்டுகளாக மண்டிக் கிடந்த குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுவதால் காற்றில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை தனியாக பிரிக் காமல் மொத்தமாக எரிப்பதால் நச்சு புகை எழுந்தது காற்று மாசுபடுகிறது. இதனால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. நிலத்தடி நீரின் தரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான சிம்னி அமைப்பதன் மூலம் காற்று மாசால் ஏற்படும் மூச்சுத் திணறல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.