வேலுார், மே 4-
வேலுார் காகிதப் பட்டறை பகுதியில், அரசின் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் பாதுகாப்பு இல்லம் இயங்குகிறது. இங்கு, 17 வயதுக்குட்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற 42 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்குள் 18 சிறுவர்கள் இங்கிருந்து தப்பினர். இவர்களில் 11 பேர் பிடிபட்டனர். ஒருவர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மீதமுள்ள 6 பேரை தனிப்படை காவல் துறையினர் தேடி வருகின்ற னர்.
மீண்டும் இதுபோன்று சிறுவர்கள் தப்பிச்செல்லும் சம்பவங்கள் நடக்காமல் இருக்க, பாதுகாப்பு இல்ல த்தை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, பாதுகாப்பு இல்லத்தின் முன்பக்க சுற்றுச் சுவரை 3 அடி உயரம் அதிகரிக்கும் பணி நடைபெறுகிறது.
அதுமட்டுமின்றி, பின்பக்கம் மற்றும் இடது, வலது சுற்றுச் சுவர்கள் மீது போடப்பட்டுள்ள முள் கம்பிகளை 3 அடி உயரம் அதிகரிக்கும் பணியும் நடை பெறுகிறது.
இதன்மூலம், பாது காப்பு இல்லத்தில் இருந்து எந்த வழியாகவும் சிறுவர் கள் தப்பிக்காத வகை யில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.