சென்னை, ஜூலை 24- கட்டுமான பொருட்க ளின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கட்டுமான தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சென்னை பெருநகர கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் வடசென்னை மாவட்ட 25ஆவது ஆண்டு பேரவை மாவட்டத் தலைவர் ஏ.நடராஜன் தலைமையில் ஞாயிறன்று (ஜூலை 24) கொளத்தூரில் நடை பெற்றது. சங்கக் கொடியை ப.ரங்கநாதன் ஏற்றினார். துணைச் செயலாளர் வி.சரவணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாவட்டத் தலை வர் எஸ்.கே.மகேந்திரன் மாநாட்டை துவக்கி வைத்தார். செயலாளர் பி.லூர்துசாமி வேலை அறிக்கையையும், பொரு ளாளர் எம்.மூர்த்தி வரவு-செலவு அறிக்கையை யும் சமர்ப்பித்தனர். மாநில துணைத் தலைவர் ஏ.நடராஜன் வாழ்த்திப் பேசினார். சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் சு.லெனின் சுந்தர் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக துணைத் தலைவர் ஜி.சிட்டிபாபு வர வேற்றார். துணைச் செய லாளர் ஜெ.அன்பு நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
வடசென்னையில் நல வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும், வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட கட்டு மான தொழிலாளர் உதவித் தொகைகளுக்கு அர சாணை வெளியிட வேண்டும், நகர்ப்புற மக்க ளின் வாழ்விடங்களை அகற்றக் கூடாது, பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், நல வாரிய ஆன்லைன் பதிவை எளிமையாக்க வேண்டும், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கட்டுமான தொழிலாளி மனைவியின் மகப்பேறு நிதி 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், இயற்கையாக மரணம் அடைந்தால் 2 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
13 பேர் கொண்ட மாவட்ட குழுவின் தலைவராக ஏ.நட ராஜன், செயலாளராக பி.லூர்துசாமி, பொருளாள ராக எம்.மூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.