districts

மெட்ரோ ரயில் நிலையத்தில்  வாகன நிறுத்தக் கட்டணம் உயர்வு

சென்னை,செப்.21-  பரங்கிமலை மெட்ரோ நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான கட்டணங்கள் புதன்கிழமை முதல் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.   கார்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அது ரூ. 3 ஆயிரம் கட்டணமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 சக்கர வாகனங்களுக்கு மாதந்தோறும் ரூ.250 வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.400 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்தில் தெற்கு ரயில்வே பரங்கிமலையில் 2 சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணத்தை ரூ.250-ல் இருந்து ரூ.450 ஆக உயர்த்தியது. இதனால்தான் தாங்களும் கட்டணம் உயர்த்தி இருப்பதாக சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.   பரங்கிமலை ரயில் நிலையத்தில் கார்களை 6 மணி நேரம் நிறுத்தி வைப்பதற்கு ரூ.20 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6 மணி முதல் 12 மணி நேரம் நிறுத்துவதற்கு ரூ.30 கட்டணமாகும். 12 மணி நேரத்துக்கு மேல் ரூ.40 கட்டணம் ஆகும். இது பரங்கிமலைக்கு வரும் மெட்ரோ ரயில் பயணிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

;