districts

மீனவர்களுக்கு மானியத்தில் வழங்கும் டீசல் விலை உயர்வு மாபெரும் போராட்டத்தை நடத்த சிஐடியு திட்டம்

மயிலாடுதுறை, பிப்.23 - மயிலாடுதுறை மாவட்டம் பழையார்  மீன்பிடித் துறைமுகத்தில் தமிழ்நாடு மீன்  வளர்ச்சி கழகத்தால் நடத்தப்பட்டு வரும்  டீசல் விற்பனை நிலையத்தின் மூலமாக  மீனவர்களுக்கு விற்கப்படும் மானிய விலை டீசல் கடந்த ஜனவரி மாதம் முதல்  படிப்படியாக 4 முறைகளுக்கு மேல் விலையேற்றம் செய்து தற்போது 1 லிட்டர் டீசல் விலை ரூ.103.16 க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்து மாபெரும் போராட்டத்தை சிஐடியு சங்கம் நடத்த உள்ளதாக அறி வித்துள்ளது. பழையார் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் நிலையத்தில் ரூ.93.60-க்கு  விற்கப்பட்டு வரும் நிலையில், எந்தவித  முன்னறிவிப்புமின்றி மீன் வளர்ச்சி கழகத்தால் டீசல் விலை உயர்த்தி விற்கப்படுவது மீனவர்கள் மத்தியி லும், பொதுமக்கள் மத்தியிலும் அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மீன்பிடித் தொழில் நலிவ டைந்துள்ள நிலையில் டீசல் விலை யேற்றம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். அதிக முதலீடு செய்து மீன்பிடி விசைப் படகு வைத்துள்ள மீனவர்கள் மற்றும்  அவர்களது குடும்பத்தினர், மீன்பிடித்  தொழில் செய்து பிழைப்பு நடத்துகின்ற னர். இதனால் மீன்பிடித் தொழிலாளர் கள், விற்பனையாளர்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் மிகப்பெரிய பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். 

உயர்த்தப்பட்ட டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பழையார் மீன்பி டித் துறைமுகத்திலுள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் கடந்த 1 வாரமாக  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு போராடி  வருகின்றனர். அந்த துறைமுகத்தி லிருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப்பட குகள், 300-க்கும் மேற்பட்ட பைபர் படகு கள், 250-க்கும் மேலான நாட்டுப்படகு கள் என 900 படகுகள் கடலுக்குச் செல்லா மல் போராடி வருவதால் ஆயிரக்கணக் கான குடும்பங்கள் வறுமையில் வாடும்  நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மீன் வளர்ச்சி கழகத்தால் உயர்த்தப்பட்ட டீசல் விலையை குறைத்து மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் கிடைக்க உரிய நடவ டிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க வேண்டுமென தமிழ்நாடு மீன்பிடித் தொழிலாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் (சிஐடியூ) மயிலாடுதுறை மாவட்டக் குழு  கோரிக்கை விடுத்துள்ளது. இதுமட்டுமின்றி, கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பாதிக்கப்பட்டு உள்ள மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரி களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சிஐடியு  சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.