districts

img

இல்லத் திறப்பு விழா

சென்னை மற்றும் புறநகர் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் (தென் சென்னை) மாவட்ட பொருளாளர் பி.சுப்பிரமணி இல்லத் திறப்பு விழா ஞாயிறன்று (டிச.4) செனாய் நகரில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ், இல்லத்தை திறந்து வைத்தார். அப்போது, சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமாரிடம் நிர்மல் பள்ளிக்கு வளர்ச்சி நிதியாக 3 ஆயிரம் ரூபாயை சுப்பிரமணி வழங்கினார். உடன் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை) உள்ளிட்டோர் உள்ளனர்.