districts

img

அரசு கல்லூரியில் புதிய கலையரங்கம் திறப்பு

திருவண்ணாமலை, செப்.9- திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி யில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங் கம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை பொதுப்பணித்துறை, அமைச்சர் எ.வ.வேலு  திறந்து வைத்தார். உயர்கல்வித்துறை சார்பாக திரு வண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் ரூ. 1.41 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கலை யரங்கம் மற்றும் உள்கட்டமைப்பு வசதி களை பொதுப்பணித்துறை, அமைச்சர் எ.வ. வேலு பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.  இந்த கலையரங்கம் 782 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் தரைதளம், கலையரங்க மேடை, 750 நபர்கள்  அமரும் வகையில் இருக்கை திறன் மற்றும் ஓய்வறை அனைத்தும் திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி  மேம்பாட்டு திட்டத்தின் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. மேலும், ரூ.25 லட்சத்தில் உள்கட்ட மைப்பு பணிகள், ரூ.10 லட்சத்தில் கழிவறை யும் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர்  பாஸ்கர பாண்டியன், சட்டமன்ற உறுப் பினர்கள்.மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), மாநில தடகள  சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், மாநகராட்சி துணை மேயர் ராஜாங்கம், அரசுக் கலைக்கல்லூரி முதல்வர் இல.ரேவதி, உள்ளாட்சிப் பிரதிநிதி கள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.