வேலூர், டிச. 28- வேலூர் நறுவீ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை ரோபோவை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகனும், வலிப்பு நோய் கண்காணிப்புப் பிரிவை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியும் தொடங்கி வைத்தனர். விழாவில் மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி.சம்பத் வரவேற்றார். துணைத் தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குனர் டாக்டர் பால்ஹென்றி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். வேலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏபி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்த் நாயர் நன்றிகூறினார். மூளைஅறுவை சிகிச்சை செய்யும் ரோபோ தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனை மற்றும் கேரளா அமிர்தா மருத்துமனைக்கு அடுத்தாக வேலூரில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள நறுவீ மருத்துவமனையில் அந்த வசதிகள் உள்ளது. இதன், மூலம் மூளையில் 12 மணி நேரம் செய்யவேண்டிய அறுவை சிகிச்சை இயந்திரம் மூலம் 6 மணி நேரத்தில் துல்லியமாக செய்ய முடியும். ரத்த விரயம் இருக்காது. தலையை அறுவை செய்ய அறுவை சிகிச்சை செய்யாமல் பயாப்சி நீடில் மூலமாக பாதிப்பு உள்ள பகுதியில் மட்டும் இந்த சிகிச்சையை மேற்கொள்ள முடியும். ரோஸி ரோபோ என்று அழைக்கப்படும் இந்த நவீன தொழில்நுட்பம் பிரான்ஸ் நாட்டில் வடிவமைக்கப்பட்டது. மேலும் புதிதாக துவங்கப்பட்டுள்ள வலிப்பு நோய் கண்காணிப்பு பிரிவு மூலம் வலிப்பு நோய் உடலில் எந்த பகுதியில் பாதிப்பை உண்டாக்கி உள்ளது என்று என்பதை நவீன தொழில்நுட்ப வசதி மூலம் கண்டறிந்து தீர்க்க முடியும் என்றும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடுத்தபடியாக நறுவீ மருத்துவமனையில் உள்ளது என்று கூறினார்.