செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கண் அறுவை அரங்கம் மற்றும் உள் நோயாளிகள் பிரிவு கட்டிடம் மற்றும் ரூ. 1 கோடி மதிப்பில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டிங்களை பொதுப்பணித்துறை அமைச்சர்.எ.வ.வேலு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.